Friday, April 30, 2021

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) பற்றிய பதிவு:

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) பற்றிய பதிவு:

PPF பற்றி இந்த வாரம் பார்த்திடலாம் வாங்க.


பொது வருங்கால வைப்பு நிதி என்பது Public Provident Fund (PPF) இந்தியாவின் சேமிப்பு மற்றும் வரி சேமிப்பு திட்டமாகும். சிறிய சேமிப்புக்களைத் திரட்ட 1968 இல் மத்திய நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். 


PPF என்பது மிகச் சிறந்த நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். PPF என்பது சுயதொழில் செய்வோருக்கும், EPF ஊழியர்களுக்கும் முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது. PPF முதலீடு மத்திய அரசால் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால் இது முற்றிலும் ஆபத்து இல்லாதது. (வட்டி மாறுதலுக்கு உட்பட்டது).

நீண்ட கால முதலீட்டிற்கு இந்த PPF முதலீட்டைத் தேர்வு செய்யலாம். மேலும் வருமானம், பாதுகாப்பு மற்றும் வரி சேமிப்பு ஆகியவற்றின் கலவையாக இருப்பதால் இந்த திட்டம் மிகவும் பிரபலமானது.

• நடுத்தர வர்க்கத்தில் உள்ள பலர் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீடு செய்கின்றனர்.

• தற்போது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும்.

• ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

• PPF முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம். PPF வரும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

• PPF கணக்கில் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை மற்றும் வட்டி இவை இரண்டிற்கும் வரிவிலக்கு உண்டு.

• PPF கணக்கில் வட்டியை ஆண்டுதோறும் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 31 அன்று கணக்கில் செலுத்தப்படும்.

• PPF கணக்கு திறந்து 7-வது நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் Withdrawal அனுமதிக்கப்படுகிறது.

• PPF கணக்கு திறந்து 3-ம் நிதியாண்டிலிருந்து 6-ம் நிதியாண்டு Loan வசதி கிடைக்கிறது.

• கணக்கு துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், நமது கணக்கில் உள்ள பணத்தின் 50 சதவீத அளவிலான பணத்தை நாம் திரும்பப் பெறலாம். அதற்கு மேல் பெற இயலாது.

• PPF கணக்கை ஒரு Post Office-ல் இருந்து மற்றொரு Post Office-க்கு Transfer செய்துக்கொள்ளலாம்.

• Nominee நியமிக்கும் வசதியும் இதில் உள்ளது.


PPF கணக்கைத் துவங்குவது எப்படி? 

கணக்கைத் துவங்கத் தேவையான ஆவணங்கள்: 

• Permanant Account Number (Pan Card),  முகவரி ஆவணம் - Aadhaar card, Driving Licence,     Passport, Voter Card இவற்றில் ஏதாவது ஒன்று, பாஸ்போர்ட் போட்டோ - 2

• நீங்கள் PPF Account-யை Open செய்யும்போது, ஆரம்ப தொகையாக Rs.100 செலுத்த வேண்டும்.

• ஒரு நிதியாண்டிற்குக் குறைந்தபட்சம் Rs.500 ரூபாயாவது Deposit செய்ய வேண்டும்

• அதிகபட்சமாக  Rs.1,50,000 வரை ஒரு நிதியாண்டிற்குச் செலுத்தலாம்.

• தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் தொகை செலுத்தப்பட வேண்டும். நடுவில் கட்ட தவறினால், PPF கணக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.

• PPF திட்டத்தின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர், ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

• பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் மூலமாக PPF கணக்கைத் துவங்க முடியும்.

• தங்கள் பெயரில் எந்த கிளை அலுவலகத்திலும் கணக்கு துவங்க முடியும்.

• 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மேஜர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ்க் கணக்கு துவங்கலாம். கணக்க துவங்குபவர், அந்த மைனருக்குப் பாதுகாவலர் ( Guardian) ஆகச் செயல்படுவார்.

• Joint account இல்லை.

• ஒரு Post Office PPF கணக்கில், ஒரு ஆண்டில் ஒரே தவணையாக  மொத்தமாக அல்லது அதிகபட்சம் 12 தவணைகளில் செலுத்தலாம்.

• ஆண்டின் இறுதியில் வட்டி, நமது கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதைய நிலவரப்படி 7.1 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. (அடுத்த quarterல இந்த வட்டி விகிதம் 6.4% என மாற்றப்படலாம்.)

கூட்டு வட்டி (Cumulative Interest) என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுவதால், இதன்மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் என்பது குறைந்த பட்சம் 9 % முதல் 12 % ஆகும்,

• PPF கணக்கை 15 ஆண்டுகளுக்கு முன்பே Close செய்ய முடியாது.

• ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய நீதி அரசு வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கிறது.

கடந்த 3 வருடம் PPF யின் வட்டி விகிதம்:


நீங்க Tax Savingக்கு மட்டும் இந்த PPF முதலீடு செய்வதற்கு ELSS Mutual Fund ல முதலீடு செய்யலாம். இதைப் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.


Information is Wealth! 

இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.

Friday, April 23, 2021

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) பற்றிய பதிவு:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) பற்றிய பதிவு:

மன்னா, ஏன்னா மங்குனி அமைச்சரே? இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன மன்னா?  மங்குனி அமைச்சரே, தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போலக் கஷ்டமான விடுகதை இல்லை. 

EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது. 

இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது EPF சேமிப்பிற்கு ஒரு பங்களிப்பை வழங்க வேண்டும், மேலும் இதேபோன்ற பங்களிப்பை முதலாளியும் வழங்குகிறார். இது எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு வழங்கப்பட்ட நிதி. இந்த திட்டத்தில் ஊழியர் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியைச் சேமிக்க முடியும், இதனால் அவர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் அதைப் பயன்படுத்தலாம். 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் சம்பளம் பெறும் நபர்கள் தங்களது அடிப்படை + அகவிலைப்படி (Basic + Dearness Allowance) இல் 12% அல்லது EPF-க்கு ரூ .780 பங்களிப்பு செய்வது கட்டாயமாகும். 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கும், அடிப்படை சம்பளம் ரூ .6291க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் EPF இல் பங்கேற்பது கட்டாயமாகும். மேலும், சேமிக்கப்பட்ட தொகை வட்டி சம்பாதிக்கிறது மற்றும் வரி விலக்குக்குத் தகுதியுடையது. 

EPF பற்றிய மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், இது ஓய்வுக்குப் பிறகு பயன்படுத்தக்கூடிய முதலீட்டுத் திட்டமாகத் தேர்வு செய்யலாம். EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கும் எவ்வளவு வட்டி வழங்கப்படும் என்பதை EPFO அறிவிப்பாக வெளியிடும். உதாரணமாக, இந்த நிதியாண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

EPFO சேமிப்புத் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இது மட்டுமல்லாது EPF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், பல நன்மைகள் உள்ளன. இங்கு சில நன்மைகளைப் பார்ப்போம்.

1.ஓய்வூதிய திட்டம் (Employee Pension Plan): 

இது ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகையை ஓய்வூதியம் திட்டத்திற்கு பிடித்தம் செய்கிறது. இந்த தொகை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது. 12 % இல் 3.67% ஊழியர்களின் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்கிறது.

2.சிறந்த சேமிப்பு திட்டம் :

EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி வழியாக அதிக வருமானம் கிடைக்கிறது. 8.5% வட்டி வழங்கப்படும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குக் கூட இவ்வளவு வட்டி கிடைப்பதில்லை. இது நீண்ட கால முதலீட்டுக்கு நல்ல முதலீட்டுத் திட்டம். 

3.இலவச காப்பீட்டு வசதி:

உங்கள் EPF கணக்கு தொடங்கியவுடன், இயல்பாகவே இலவச காப்பீட்டைப் பெறலாம். ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) கீழ் ரூ .6 லட்சம் காப்பீடு கிடைக்கும். ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால், EPFO இன் செயலில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வமா வாரிசுக்கு, ரூ .6 லட்சம் வரை மொத்த தொகை கிடைக்கும். இந்த நன்மையை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

4.வரிச் சலுகைகள்:

வருமான வரியில் பணத்தை மிச்சப்படுத்த EPF மிகவும் எளிய மற்றும் சிறந்த வழி. EPF கணக்கு வைத்திருப்பவர்கள் வருமான வரியின் பிரிவு 80 C இன் கீழ் தங்கள் சம்பளத்தில் 12% வரிகளைச் சேமிக்க முடியும். ஆனால் புதிய வரிவிதிப்பு (New Tax Regime) முறையில் இந்த நன்மை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உங்கள் வரியைக் கணக்கிடுவதற்குப் பழைய வரி முறையையே (Old Tax Regime) தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த நன்மையை நீங்கள்  பெறலாம்.

UAN (UNIVERSAL ACCOUNT NUMBER):

UAN என்பது 12 இலக்க தனித்துவமான நம்பர் ஆகும். UAN எண் மூலம், நீங்கள் எத்தனை முறை உங்கள் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றினாலும் UAN எண் மூலம் அனைத்து EPF கணக்குகளையும் இணைத்துக்கொள்ளலாம். (ஒவ்வொரு நிறுவனத்திலும் உங்களுக்குத் தனிப்பட்ட EPF கணக்கு துவங்கப்படும்.) நீங்கள் EPF கணக்கு வைத்துள்ள வரை அல்லது நீங்கள் பணி செய்யும் காலம் வரை அனைத்து கணக்குகளும் உபயோகப்படுத்தல் இருக்கும். எனவே UAN  எண்ணைக் கொண்டு அனைத்து கணக்குகளின் விபரங்களையும் சேர்ப்பதே இந்த UAN எண்ணின் பணி. 

அதாவது வரலாறு முக்கியம் அமைச்சரே? போல இந்த UAN நம்மாளுக்கு உதவுகிறது.

மேலும் UAN மூலம், EPF பாஸ் புத்தகத்தை, நற்சான்றிதழ்களைப் புதுப்பித்தல், பழைய கணக்கை மாற்றுவது, முந்தைய உறுப்பினர் ஐடிகளை தற்போதைய வற்றுடன் இணைத்தல், மாதாந்திர EPF பங்களிப்பு, SMS சேவை போன்ற தகவல் சேவைகளைச் செயல்படுத்துதல் போன்ற செயல்பாடுகளைச் செய்வதில் நிறைய எளிமை ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்து வசதிகளையும் பெற, ஊழியர்கள் UAN portal லில் ஒரு கணக்கை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். KYC விவரங்களையும் பதிவேற்றவும் புதுப்பிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

சரி இந்த EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி என்று பார்ப்போம்: 

வேலையிழந்தால் பிஎஃப் பணம் எடுக்க அனுமதி ஒரு மாத வேலையின்மைக்குப் பிறகு EPF நிலுவைத் தொகையில் 75% வரையில் திரும்பப் பெறலாம். இதே வேலையின்மை தொடர்ந்தால், மீதமுள்ள 25% தொகையும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. சம்பளதாரரின் திருமணம் அல்லது மகன்/ மகள் திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவச் செலவு, வீட்டுக்கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் எனப் பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு. இதற்காக நீங்கள் Form 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். 

EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது எப்படி? 

இதற்காக நீங்கள் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN கொடுத்து Login செய்யவும். அதன் பிறகு Claim என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடவும். அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும். அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றைச் சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதைத் தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்குத் தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்பு உங்களுக்கு உங்களது EPF தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.

UMANG App பயன்படுத்தியும் EPF கணக்கிலிருந்து எளிதாகப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும். 

அதில் Employee Centric services என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Raise Claim என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN Number- ஐ பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password-ஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையைத் தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து உங்களுக்கு Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளலாம். 

எனினும் அரசின் இந்த வசதியைத் தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாருடன் UAN Number, UMANG App, மொபைல் எண் ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


Information is Wealth! 

இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.

Friday, April 16, 2021

சிபில் ஸ்கோர் பற்றிய பதிவு: (CIBIL Score)

சிபில் ஸ்கோர் பற்றிய பதிவு:

லோன், கிரெடிட் கார்டு அப்ளை பண்ணப் போன சிபில் ஸ்கோர் முக்கியம் பிகிலு nu சொல்ராங்க.

சரி இந்த சிபில் ஸ்கோர்ன என்னவென்று இந்த பதிவில் விரிவா பார்த்துவிடுவோம் வாங்க.,

Credit Information Bureau (India) Ltd என்கிற சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பு கடன் பெறும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர்கள் அந்தக் கடனை திரும்பச் செலுத்துவதை அடிப்படையாக வைத்து சிபில் ஸ்கோரை வழங்குகிறார்கள்

இந்த சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்கலாமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கின்றன.

சிபில் ஸ்கோர் என்பது கடந்த காலத்தில் வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியுள்ளீர்களா? என்பது போன்ற பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது.

சிபில் ஸ்கோர் என்பது உங்களின் கடன் தகுதியைக் குறைக்கும் மூன்று இலக்க மதிப்பெண் ஆகும்.

இது 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 700க்கு மேல் இருக்கும் சிபில் ஸ்கோர் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

சிபில் ஸ்கோரை எப்படித் தெரிந்து கொள்ளலாம் உங்களது சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ள cibil வலைத்தளத்திற்கு https://cibil.com என்ற பக்கத்திற்குச் செல்லவும். அதில் free annual cibil score option க்ளிக் செய்யவும், அதில் உங்களது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் Pan Card விவரங்கள் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகக் கொடுக்கவும்.

பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும், அதை உறுதிப்படுத்திய பிறகு அங்கு உங்களது சிபில் ஸ்கோரினை நீங்கள் காண முடியும்.

ஒரு வருடத்திற்கு Cibil இருந்து ஒரு விரிவான கடன் அறிக்கையை இலவசமாகப் பெற உங்களுக்கு உரிமை உண்டு. எனினும் இது ஒரு முறை மட்டுமே இலவசமாகப் பார்க்க முடியும்.

நீங்கள் ஒரு முறைக்கு மேல் பார்க்க விருப்பப்பட்டால், நீங்கள் கட்டணத்தினை செலுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். இது ஒரு மாதத்திற்கு 550 ரூபாய் எனவும், இதே 6 மாதங்களுக்கு 800 ரூபாயும், 1 வருடத்திற்கு 1,200 ரூபாய் செலுத்தியும் பார்த்துக் கொள்ளலாம். இந்த கட்டணம் செலுத்தினால்

நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

அதிக சிபில் ஸ்கோர் இருப்பதின் நன்மைகள்:

- கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு விரைவான ஒப்புதல்

- கடன்களுக்கான மலிவான வட்டி விகிதங்கள்

- சிறந்த மற்றும் அதிக கடன் வரம்பைக் கொண்ட கிரெடிட் கார்டுகள்

- கடன் விண்ணப்பங்களுக்கான செயலாக்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் மீதான தள்ளுபடி

சரி இந்த சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி என்று பார்ப்போம்?

1.சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தவும்: 

உங்கள் நிலுவைக் கடனுக்கான திருப்பிச் செலுத்துதல்களைத் தவறவிடுவது ஒரு பெரிய தவறாகும், ஏனெனில் இது உங்கள் கடன் மதிப்பெண்ணை மோசமாகப் பாதிக்கும்.

2.உங்கள் Loan Account உள்ள பிழைகளைச் சரிபார்க்கவும்: 

உங்கள் கடனை முழுவதுமாக செலுத்தி, loan account close செய்து விட்டு, ஆனால் நிர்வாகப் பிழை காரணமாக அது open not closed தோன்றுகிறது என்றால். அதை நீங்கள் தான் சரிபார்க்க வேண்டும். இந்த பிழைகளைத் தீர்க்கப்பட்டது என்றால்,உங்கள் மதிப்பெண் உடனடியாக உயரும்.

3.கடன்களைப் பராமரிக்கவும்:

கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகன கடன், வீட்டுக் கடன் போன்ற பாதுகாப்பான கடன்கள் போன்ற பாதுகாப்பற்ற கடன்களின் நல்ல கலவையை வைத்திருப்பது எப்போதும் நல்லது. உங்களிடம் அதிக பாதுகாப்பற்ற கடன்கள் (Personal Loan) இருந்தால், உங்கள் பாதுகாப்பற்ற கடன்களை முன்கூட்டியே செலுத்த முயற்சிக்கவும்.

4.கிரெடிட் கார்டுகள்: 

உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைக் கட்டுவது உங்கள் நடத்தை குறிக்கிறது. சில நேரங்களில் பரிவர்த்தனைகள் வங்கிகளுக்குள் தாமதமாகும், எனவே உங்களது கிரெடிட் கார்டு முழு நிலுவைகளை உரியத் தேதிக்கு 4 - 5 நாட்களுக்கு முன்பே செலுத்தவும், இது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும்.

5. கூட்டுக் கணக்கு: 

கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர் அல்லது கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பதைத் தவிர்க்கவும், ஏனென்றால் மற்ற நபரின் கிரெடிட் ஸ்கோர் உங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பாதிக்கும்.

6.பல கடன்களை எடுப்பதைத் தவிர்க்கவும்: 

ஒரே நேரத்தில் பல கடன்களை எடுத்துக்கொள்வது, அவை அனைத்தையும் செலுத்த உங்களிடம் போதுமான நிதி இல்லை என்பதைக் காட்டுகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த ஒரு நேரத்தில் ஒரு கடனை எடுத்து வெற்றிகரமாகச் செலுத்துவது நல்லது.

7.உங்கள் கடன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்: 

உங்கள் கிரெடிட் கார்டை அதன் உச்ச வரம்பிற்குப் பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான விரைவான வழிகளில் ஒன்றாகும். உங்கள் கடன் வரம்பு ரூ. ஒரு மாதத்திற்கு 1,00,000 ரூபாய், நீங்கள் ரூ. 30,000 உங்கள் கிரெடிட் கார்டு மூலம். 30% ஐத் தாண்டினால், மேலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும்.

8.நீண்ட கால கடன்: 

கடனை எடுக்கும்போது, பணத்தைத் திருப்பிச் செலுத்த நீண்ட காலத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வழியில், EMI குறைவாக இருக்கும், மேலும் நீங்கள் சரியான நேரத்தில் அனைத்து நிலுவைத்தொகையைக் கட்ட முடியும். தவறியவர்கள் பட்டியலிலிருந்து உங்களை ஒதுக்கி வைத்து, உங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்துவார்கள்.

9.கடன் வரம்பு: 

உங்கள் கார்டின் கடன் வரம்பை அதிகரிக்க உங்கள் வங்கி உங்களிடம் கேட்டால் ஒருபோதும் வேண்டாம் என்று சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாதமும் நீங்கள் அதிகப் பணம் செலவழிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தமல்ல, மாறாக உங்கள் செலவுகளை நிர்வகிப்பதில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

10.கடன் விசாரணைகள்

தனிநபர் கடன், வாகன கடன் மற்றும் பல குறுகிய காலத்திற்குள் அதிகமான விசாரணைகள் இருந்தால், அது கடன் தேவையை வெளிப்படுத்துகிறது, ஒவ்வொரு விசாரணைகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்க வேண்டும்.

வழக்கமாக ஒரு நபரின் நிலைமையைப் பொறுத்து உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த 4- 13 மாதங்கள் ஆகும்,. நீங்கள் பணத்தைச் செலவழிக்கும்போது அல்லது கடன் எடுக்கும்போது புத்திசாலித்தனமாகவும், பொறுமையாகவும் சரியான நேரத்தில், பணத்தைக் கட்டி வந்தால் நிறைய நல்லது.

இன்னும் நல்ல தலைப்புடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்.

Friday, April 9, 2021

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) பற்றிய பதிவு:

Mutual Funds சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP)  பற்றிய பதிவு:

வாங்கனா வணக்கம்னா 

என்ன பங்கு சௌக்கியமா? இந்த பதிவில் என்ன சொல்லபோறிங்க பங்கு

இந்த பதிவில் kutty story on  சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) நண்பா

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அந்த நிதியைப் பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால சந்தைப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதாகும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இதில் மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய முடியும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது ஈக்விட்டி (பங்குச் சந்தை), பாண்ட் /Debt இவற்றில் மாதாமாதம் சிறு தொகை தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு திட்டமாகும்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்வது சந்தை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஆபத்தைக் குறைக்கிறது. சந்தை நேர்மறையானதாக இருக்கும்போது, உங்களுக்குக் குறைவான அலகுகள் (NAV) ஒதுக்கப்படுகின்றன, சந்தை வீழ்ச்சியடையும் போது, உங்கள் முதலீட்டின் அதே தொகைக்கு அதிக அலகுகளைப் (NAV) பெறுவீர்கள்.

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP), நீண்டகால முதலீட்டுக்கு எளிதான சிறந்த வழியாகும்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாயைச் சேமிக்க நல்லத் திட்டம் எது என்றால், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP உங்களுக்குச் சிறந்த வழியாகும். 

இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் SIP முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே நிறுத்திக் கொள்ளலாம்.

உங்களால் சிறிய தொகையை நீண்ட காலத்துக்குத் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மிகப் பெரிய தொகையை உங்களால் சேமிக்க முடியும்.

உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு ரூ .5000 முதலீடு செய்தால், ரூ .6 லட்சம் முதலீட்டிற்குக் குறைந்தபட்ச 12% வட்டிக்கு எதிராக ரூ .11.5 லட்சம் கிடைக்கும்.

உங்கள் இலக்கையும் தீர்மானித்து, நீங்கள் SIP-யை தொடங்கலாம்.

நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது, அதில் முக்கியமாக Expense Ratio, AUM, Fund Size, compounding etc…

பல முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன, ஆனால் நான் Groww மற்றும் Cleartax App பயன்படுத்தி நேரடித் திட்டங்களில் (Direct Plans) முதலீடு செய்துள்ளேன்.  கணக்கை open செய்வது மிகவும் எளிதானது,app download fund select செய்து Pan card and aadhaar card போன்ற ஆவணப்படுத்தப்பட்ட ஆவணத்தைப் பதிவேற்றவும்

என்ன நண்பா நண்பி எல்லாரும் kutty story படித்துக்கொண்டு like & share செஞ்ச மற்றவர்களும் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.


நண்பர் அஜித் உடன் உங்களை அடுத்த பதிவில் இன்னும் நல்ல தலைப்புடன் வருகிறேன். நன்றி. வணக்கம். 

Friday, April 2, 2021

TN Power Finance வைப்புத் திட்டம் (F.D) பற்றிய பதிவு

TN Power Finance வைப்புத் திட்டம் (F.D) பற்றிய பதிவு:

அண்ணே, இது என்னண்ணே திட்டம்?


எனக்குத் தெரியாது, நீயே சொல்லுடா

சரி அண்ணே, இந்த பதிவில் TN Power Finance வைப்புத் திட்டம் (F.D) பற்றி விவாதிக்க உள்ளோம்.

டி.என் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (TN Power Finance Corp) நிலையான வைப்புகளில் 8.25 சதவீத வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. டி.என் பவர் ஃபைனான்ஸ் என்பது வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC), இது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்திற்கு (TANGEDCO) மட்டுமே கடன் வழங்குகிறது

இது நாட்டின் பெரும்பாலான வங்கிகள் வட்டி வழங்குவதை விடக் கிட்டத்தட்ட 2-3 சதவீதம் அதிகம்.

Non Cumulative FD: 

வட்டி மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தப்படும். முதிர்ச்சியில், உங்கள் முதலீட்டை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.இந்த FD காலம் 2, 3, 4 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஆகும். வட்டி விகிதங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து 7.25% முதல் 8.00% கிடைக்கும்

Cumulative FD:

வட்டி காலாண்டு கூட்டு மற்றும் முதிர்ச்சியில் செலுத்தப்படும். இந்த FD களின் காலம் 1, 2, 3, 4 மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஆகும். வட்டி விகிதங்கள் 7.25% முதல் 8.50% வரை இருக்கும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட FD  இன் காலத்தைப் பொறுத்துக் கிடைக்கும்.

மூத்த குடிமக்களுக்கு 0.5% கூடுதல் வட்டி விகிதங்கள் கிடைக்கும்.

தனியார் நிறுவன வைப்புத்தொகையை விடப் பாதுகாப்பானவை. வட்டி செலுத்துதல் எப்போதும் சரியான நேரத்தில் செலுத்தப்படும் என்று அர்த்தமல்ல. இதன் பொருள் என்னவென்றால், மின் நிதி நிறுவனம் சிக்கலில் சிக்கினால், TN அரசாங்கங்களின் ஈடுபாட்டின் காரணமாக உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள்.

சரியான நேரத்தில் வட்டி செலுத்தும் TN Power Finance அவர்களின் நிதி நிலைமையைப் பொறுத்தது. நூறு சதவீதம் அரசுக்குச் சொந்தமானது 100% பாதுகாப்பானது என்று அர்த்தமல்ல.

முதலீட்டாளர்கள் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் நிலையான வைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ .50,000 மற்றும் அதற்குப் பிறகு ரூ .1,000 மடங்காகும்.

நீங்கள் ஆன்லைனில் முதலீடு செய்யலாம்

மொபைல் APP உள்ளது.

இதைத் தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் (இந்த பதிவில்) எழுத்திட்டேன், இனி நீங்க like, share செய்து உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினர் அனைவரும் இதைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.

அடுத்த பதிவில் நல்ல தலைப்புடன் வருகிறேன். நன்றி. வணக்கம். 

Featured

Index Funds பற்றிய பதிவு:

 Index Funds பற்றிய பதிவு: என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund  பத்தி பாத்துருவோமா? 1. Index Fund என்றால் என்ன? பங்குச் சந்தையில் ஒரே Index சே...

Popular